
தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடந்தாலும் தான் அதற்கு பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் நாடகம் ஆடுவது வாடிக்கையாகிவிட்டதாக இந்திய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இதை வெளியிட்ட ஐநாவிற்க்கான இந்திய செயலர் விமார் சாரியன் ஐ நாவல் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார். சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடன் பாகிஸ்தான் நீலி கண்ணீர் வடிக்கிறது என்றார் அவர்.
சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானிற்கு இந்தியா சிறுபான்மையினரை துன்புறுத்துகிறது எனக் கூற என்ன அருகதை உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். சிந்து மாகாணத்தில் இந்து பெண்ணை கடத்தி மதம் மாற்றி காட்டுமிராண்டி ஆட்சி நடத்தும் ஜனநாயகம் முழுமையாக தழைத்தோங்கும் இந்தியாவில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அறியாமல் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment